ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல்அவுட்: ஸ்மித் அபார சதம்

வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:01 IST)
ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆல்அவுட்: ஸ்மித் அபார சதம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் டாஸ் வெற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியினர் சற்றுமுன் 338 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீபன் ஸ்மித் 131 ரன்கள் எடுத்தார் என்பதும் அதில் 16 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 11 பவுண்டரிகளுடன் லாபுசாஞ்சே 91 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய தரப்பில் ஜடேஜா மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், பும்ரா  மற்றும் சயினி தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது ரோகித் சர்மா 7 ரன்களுடனும் கில் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் சற்றுமுன் வரை இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்