ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக தூங்குகிறேன் - யுவராஜ் சிங்

சனி, 20 ஜூன் 2020 (22:31 IST)
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் சில ஆண்டுகளுக்கு முன் புற்று நோயில் இருந்ததால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்தார்.இதையடுத்து, கடந்த வருடம்  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் அவர் தான் ஓய்வு அறிவித்தது குறித்து, அவர் மனம் திறந்துள்ளார்.
அதில், நான் கிரிக்கெட் விளையாடியதன் மகிழ்ச்சியை  அனுபவித்தேன்.
 
நான் ஓய்வு அறிவித்த  நாள் முதல் நான் சுதந்திரமாக உணர்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தூங்குகிறேன்  என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்