2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து ...

வியாழன், 21 மே 2020 (16:14 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இநிலையில் உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் பெரும் நிகழ்வுகளும் போட்டிகளும் விளையாட்டுகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இந்தியாவில்  ஒவ்வொரு மாதமும்  மே மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல்  இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை கொரோனா அச்சத்தால் நடத்த முடியவில்லை; அதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்