பணத்தை பார்த்ததும் சபலப்பட்ட ஓட்டுனர் – 52 லட்சத்தோடு தலைமறைவு !

திங்கள், 23 டிசம்பர் 2019 (09:02 IST)
வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்புவதற்காக அனுப்பப்பட்ட ஓட்டுனர் அம்புரோஸ் தலைமறவான நிலையில் அவரைப் போலிஸர் கைது செய்துள்ளனர்.

வங்கி ஏடிஎம் களில் பணம் நிரப்புவதற்கான வாகனத்தில் அம்புரோஸ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் செல்ல வில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேளச்சேரி அனுப்பப்பட்ட அந்த வேனின் ஓட்டுனரான அம்புரோஸ் பெரியத் தொகையைப் பார்த்து சபலப்பட்டு அந்த பணத்தோடு தலைமறைவாகியுள்ளார்.

அவரைத் தேடிவந்த போலிஸார் திருவாரூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அம்புரோஸிடம் இருந்து 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்