நடுரோட்டில் அக்கா கணவரைத் தாக்கிய பெண் – எதற்குத் தெரியுமா ?

வியாழன், 5 டிசம்பர் 2019 (08:56 IST)
குடித்துவிட்டு வந்து அடிக்கடி அக்காவை அடித்துத் துன்புறுத்தும் அக்கா கணவரை ஒரு பெண் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிவா மற்றும் இந்து. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. குடி அடிமையான சிவா அடிக்கடி தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதுபோல சமீபத்தில் ஒருநாள் சிவா சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது இந்துவை அடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அங்கிருந்து இந்துவின் தங்கை சங்கீதா பொறுக்கமாட்டாமல் நடுரோடு எனக் கூடப் பார்க்காமல் சிவாவை அடி வெளுத்து வாங்கியுள்ளார். அவரின் தாக்குதலை தாங்க முடியாத சிவா சாலையில் பரிதாபமாக விழுந்தார். இதை யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்