தமிழகத்தில் எப்போது ரமலான் பண்டிகை? தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

SInoj

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (20:53 IST)
தமிழ் நாட்டில் வரும் வியாழக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஷரியத் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 9-04-24 ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
 
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-424 ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11.04.24 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்