“மழை பேய்ஞ்சா.. தண்ணி தறோம்” இருமாப்பு காட்டும் கர்நாடக அமைச்சர்

செவ்வாய், 21 மே 2019 (13:49 IST)
கர்நாடகாவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவோம் என கர்நாடக அமைச்சர் எச் டி ராவன்னா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 
குறுவை சாகுபடிக்காக காவேரியில் வரும் ஜூன் 12ல் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இந்நிலையில் தமிழக கோவில்களுக்கு சுற்றுலா வந்திருக்கும் முன்னாள் பிரதமரான தேவகவுடாவுடன் அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான எச் டி ராவன்னாவும் வந்திருந்தார். கும்பகோணத்தில் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து காவேரி நீர் திறப்பு பற்றி அவர் பேசியதாவது “போன வருடம் பருவமழை சரியாக பெய்யவில்லை. எனவே அணையில் நீர்வரத்தும் அதிகமில்லை. எனவே நல்ல மழை பொழிந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்