தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் வீரமரணம்!

செவ்வாய், 5 மே 2020 (08:19 IST)
தமிழக வீரர் வீரமரணம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி இருக்கும் இந்த நேரத்திலும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் எல்லையில் அவ்வப்போது வாலாட்டி வருகின்றன. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக இருந்ததாகவும் அதனை இந்திய வீரர்கள் முறியடித்து பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹண்ட்வாரா என்ற பகுதியில் நேற்று திடீரென பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை தடுக்கும் வகையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்
 
சிஆர்பிஎஃப் பின் 92வது பட்டாலியனை சேர்ந்த 31 வயதான சந்திரசேகர் என்பவர் தான் வீரமரணம் அடைந்தவர் என்றும் இவர் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த நிலையில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகர் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவரது உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்