1,000-த்தை தொட்ட பேட்டைகள்: மோசமாக மாறும் சென்னை!!

திங்கள், 25 மே 2020 (11:45 IST)
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல். 
 
நேற்று தமிழகத்தில் 765 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் சென்னையில் மட்டும் 587 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையின் 15 மண்டலங்களில் 5 மண்டலங்கள் 1,000 பாதிப்பை தாண்டியுள்ளது. ஆம், ராயபுரத்தில் 1981, கோடம்பாக்கத்தில் 1460, திரு.வி.க.நகரில் 1188, தேனாம்பேட்டையில் 1118, தண்டையார்பேட்டையில் 1044, அண்ணா நகரில் 867, வளசரவாக்கத்தில் 703, அடையாறில் 579 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்