மிளகாய் பொடியைத் தூவி மருமகனை வெட்டிக் கொல்ல முயன்ற மாமனார்

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:01 IST)
காதல் திருமணத்தில், பெண் வீட்டார், மிளகாய்  பொடியைத் தூவி  மருமகனை வெட்டிக் கொல்ல முயற்சி செய்த நிலையில், படுகாயங்களுடன் மருமகன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் திகினார் கிராமத்தில் வசிப்பவர் விக்னேஷ் கார்த்திக். இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த  மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் நடைபெற்ற நிலையில், ஜோதியின் பெற்றொர் கோபத்தில்  இருந்தனர்.

நேற்றிரவு  ஜோதியின் அப்பா பால்ராஜ், அவரது அம்மா துளசியம்மான் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் விக்னேஷ் கார்த்தியின் வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது, விக்னேஷ் கார்த்தியின் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

கதறல் சப்தம்  கேட்டு அருகிலுள்ளோர் சம்பவ இடத்திற்கு வரவே அங்கிருந்து 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.

விக்னேஷ் கார்த்தி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரும் தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடித்து விடுவதாகவும்  போலீஸார் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்