திமுக மேடை போட்டு இப்பவே அராஜகம் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சனி, 30 மே 2020 (23:04 IST)
பாலவாக்கம் விஜிபி பிரதான சாலையில் நேற்றிலிருந்து 2 நாட்களாக , சி வியூ குடியிருப்பில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் கூட உள்ளே போகவோ வரவோ முடியாத அளவிற்கு அடைத்து திமுக மேடை போட்டு அடைந்துள்ளதாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா தனது  டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது :

பாலவாக்கம் விஜிபி பிரதான சாலையில் நேற்றிலிருந்து 2 நாட்களாக அங்குள்ள சி வியூ குடியிருப்பில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் கூட உள்ளே போகவோ வரவோ முடியாத அளவிற்கு அடைத்து திமுக மேடை போட்டு அடைந்துள்ளனர். 150 கற்கும் மேற்பட்டோர் அங்கு மாஸ்க் அணியவில்லை சமூக இடைவெளி இல்லை இப்பவே அராஜகம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்