தமிழக பட்ஜெட் செய்திகள் உடனுக்குடன்

Caston, Sasikala

வியாழன், 21 ஜூலை 2016 (10:38 IST)
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.


 
 
விபரங்கள்:-


* மீண்டும் சட்டப்பேரவை வருகிற 25-ஆம் தேதி கூடுகிறது.

* நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டரை மணி நேரம் வாசித்தார்.

* சமூக நலத்துறைக்கான மொத்த நிதி 4,512.32 கோடி ஒதுக்கீடு.

* உலமாக்களுக்கான மாத உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும்.

* புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் மாநிலத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன.

* ஆதித்திராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு.

* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1644 கோடி நிதி.

* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிதி ரூ.207 கோடி.

* பெண் குழந்தை பாதுகாப்பு/தொட்டில் குழந்தை திட்டத்திற்கு ரூ.140.50 கோடி நிதி.

* ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.703.16 கோடி நிதி.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1699 கோடி நிதி.

* இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.153.39 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஆதித்திராவிடர் நலன் துணைத் திட்டத்திற்கு ரூ.12,462 கோடி ஒதுக்கீடு.

* பழங்குடியினர் நலன் துணைத் திட்டத்திற்கு ரூ.722 கோடி நிதி ஒதுக்கீடு.

* பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளில் உணவு வழங்க ரூ.103.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் முதல் மிதிவண்டி வரையிலான இலவச திட்டங்களுக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு.

* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்காக ரூ.582.58 கோடி உதவித்தொகை ஒதுக்கீடு.

* உயர் கல்வித்துறைகு ரூ.3679.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க 125.70 கோடி ஒதுக்கீடு.

* சர்வ ஷிக்ச அபியான் திட்டத்திற்கு ரூ.2,329.15 கோடி ஒதுக்கீடு.

* இடைநிலை கல்வி இயக்க திட்டத்திற்கு 1139 கோடி நிதி ஒதுக்கீடு.

* சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்ட அறிக்கையை உருவாக்கி செயல்படுத்தப்படும்.

* மெட்ரோ இரண்டாவது கட்டத்தில் பயணப்பாதை 104 கி.மீ அமைக்க திட்டம்.

* சுகாதாரத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1,423.38 கோடி நிதி ஒதுக்கீடு.

* 10 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலக தரத்தில் மேம்படுத்தப்படும்.

* நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.11820 கோடி நிதி ஒதுக்கீடு.

* வீட்டுவசதித் துறைக்கு ரூ.689 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தூய்மைத் தமிழகத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* ரூ.373.82 கோடி செலவில் 4 நகர்புற குடிநீர் வழங்கல் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* உள்ளாட்சி நிதிபகிர்வு ரூ.11534.34 கோடி ஒதுக்கீடு.

* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைசாலை துறைக்கு 282.92 கோடி நிதி ஒதுக்கீடு.

* தீயனைப்பு துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.

* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிலான மையமாக மேம்படுத்தப்படும்.

* ரூ. 2,104.49 கோடி தொழில் துறை வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

* வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்க உள்ளது.

* உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ரூ.23,000 கோடி அளவுக்கு முதலீடுகள் இதுவரை வந்துள்ளது.

* அனல் மின்சாரம் 13000 மெகாவாட்டாகவும், சூரிய மின்சாரம் 3000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும்.

* பழைய பேருந்துகளை மாற்றி 2000 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.1295 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மேலும் மேம்படுத்தப்படும்.

* 2016-17-ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

* விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி புதிய பயிர்கடன் தரப்படும்.

* இணையதளம் வழியாக ரேசன் கார்டு முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

* மின்சார தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்படும்.


* தோட்ட கலைத்துறைக்கு 518.19 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* சேலத்தில் 5 சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்படும்.

* நெல்லை, கொல்லம் நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.

* சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1230 கோடி நிதி ஒதுக்கீடு.

* மீன்வளத்துறைக்கு ரூ.743.99 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய நதிகளை இணைக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

* வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மதுரையில் பால் பொருட்கள் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும்.

* உள்ளாட்சி தேர்தலை நடத்த ரூ.183.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்காக 68,211.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* இந்த நிதியாண்டில் 12000 கறவை மாடுகள் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்படும்.

* வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இலவச அன்ன தானம் திட்டம் 30 கோயில்களுக்கு விரிவு படுத்தப்படும்.

* ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.

* கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ.1,188.17 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி கல்வி துறைக்கு 24,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1429.94 கோடி ஒதுக்கீடு.

* கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதி 30000 ரூபாயிலிருந்து 35000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* வெள்ளத்தடுப்பு திட்டத்தில், கடலூர் மாவட்ட  ஆறுகளின் கரைகளை பலப்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு.

* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மாணியம் வழங்கப்படும்.

* லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு 1295.08 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* 2000 புதிய பேருந்துகள் வாங்க 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

* பால்வளத்துறைக்கு 121.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* 2016-17-இல் மின்சார துறைக்கு ரூ.13856 கோடி மனியமாக தரப்படும்.

* மாநிலத்திற்கு 2.5 லட்சம் கோடி கடன் உள்ளது.

* 2016-17-இல் காவல்துறையினருக்கு 2673 வீடுகள் கட்டித்தரப்படும்.

* அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* திருத்திய பட்ஜெட் மதிப்பீடு: ரூ.1,48,175.09 கோடி.

* காவல்துறையை கணினி மயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு.

* அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு.

* ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

* சிறுபாண்மையினர் மாதாந்திர உதவித் தொகை ரூ.1500-ஆக உயர்வு.

* இலங்கை அகதிகளின் நலனுக்கு ரூ.105 கோடி நிதியுதவி.

* தாலிக்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.703.16 கோடி நிதி ஒதுக்கீடு.

* மாற்று திறனாளிகளுக்கு 1000 ஸ்கூட்டர்  இலவசமாக வழங்கப்படும்.

* 500 டாஸ்மாக் கடைகள் மூடியதால் அரசுக்கு ரூ. 6,636.08 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* தமிழ்நாடு தொலைநோக்கு திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* வேலை வாய்ப்பு அலுவலகங்கள், வேலை வாய்ப்பு மையங்களாக செயல்படும்.

* மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு.

* ஆறுகள் புத்துயிர் திட்டத்தில் 24.58 கோடி ரூபாயில் தூர்வாரப்படும்.

* அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.

* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் மடிக்கணினிகள் 
வழங்கப்படும்.

* அடுத்த ஓராண்டில் சாலைப்பணி திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.

* ரூ.442 கோடி செலவில் 2673 காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும்.

* அடுத்த ஓராண்டில் ரூ.240 கோடியில் சூரிய ஒளி மின்சக்தி 20 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 15854.47 கோடி என நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

* முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழக்கம்போல புகழாரம் பாடி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

* இன்னும் சிறிது நேரத்தில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

* நிதியமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வருகை.

* முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
 
* தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்