அம்பேத்கர், தீரன் சின்னமலை பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்?

ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (11:22 IST)
தமிழகத்தில் 144 தடை உத்தரவால் தலைவர்களின் பிறந்தநாள்  நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை. 
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 827 பேர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆக இருந்தது இந்த நிலையில் தற்போது அது 8356 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 242 ஆக இருந்த நிலையில் தற்போது 273 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி ஒரே நாளில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 716 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி மிக விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனால், தமிழகத்தில் ஏப்.14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளிலும், ஏப்.17 ஆம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்தநாளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்