வெள்ள நிவாரணம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.. மத்திய அரசுக்கு செக்?

Siva

புதன், 3 ஏப்ரல் 2024 (07:31 IST)
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் நேற்று வேலூர் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்து இருந்த நிலையில் உடனடி நடவடிக்கையாக வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த டிசம்பர் மாதம் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் திருநெல்வேலி உட்பட நான்கு தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனை அடுத்து வெள்ள நிவாரணம் கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையின்படி மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணங்களை நிவாரண நிதி தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்