இந்த 7 மாவட்டவாசிகளே கேளுங்க... உங்க ஊருக்கு தான் மழை!!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:39 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமான மழை பெய்யகூடும் என கூறப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்