நீங்களாவது நீட்டை ரத்து செய்யுங்க! ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்த மாணவர்கள்

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:43 IST)
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுகளை அனுமதிக்க கூடாது என்று தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அரியலூரில் மாணவர் ஒருவர் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீட் ரத்து குறித்த போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை மாணவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையிடம் நீட் தேர்வை ரத்து செய்ய மனுவை அளித்து போராடியுள்ளனர். ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதால் போலீஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்