ஆன்லைன் பாடம் புரியாததால் மாணவன் தற்கொலை !

வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:38 IST)
கொரோனா காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவன் தனக்குப் பாடம் புரியவில்லை என்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கொளத்தூரியில் 11 ஆம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பு நடத்திய பாடங்கள் எதுவும் புரியாமல் இருந்ததால், ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 6,7,8, ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது தொடங்கப்படும் என இன்னும் அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்