புயலுக்கு பக்கா தமிழ் பெயர் ரெடி: எப்போ வரும்னு தெரியுமா??

வியாழன், 30 ஏப்ரல் 2020 (15:33 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களின் பெயா் பட்டியலில் இரண்டு தமிழ் பெயர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 
 
புயல்களுக்கு பெயரிடும் முறை 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
 
2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 63 புயல்கள் வந்து சென்ற நிலையில் தற்போது அடுத்த கட்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.
 
இதில் முரசு மற்றும் நீா் எனும் தமிழ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த புது பட்டியலின் படி 28-வதாக வரும் புயலுக்கு முரசு எனவும் 93-வதாக வரும் புயலுக்கு நீர் எனவும் பெயர் வைக்கப்பட்ம். இந்த பட்டியலில் மொத்தம் 169 பெயர்கள் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்