பால் பாக்கெட் போட்டு பலாத்காரம்... ஊரடங்கில் அடங்கா மர்ம நபர்!!

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:03 IST)
சென்னையில் பால் பாக்கெட் போடுவது போல நடத்து ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் உள்ள திருமங்கலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், நேபாளத்தை சேர்ந்த தம்பதியின் இருந்து வந்துள்ளனர். கணவன் காவலாளியாக வேலைக்கு சென்றுவிட்டதாள் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். 
 
அதிகாலை நேரம் ஒருவன் பால் பாக்கெட் போட வந்தவன் போல நடித்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். அந்த பெண் கத்தி சூச்சலிடவும், அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். 
 
கணவன் வந்தது நடந்தை கூறி இருவரும் போலீஸில் புகார் அளித்துள்லனர். விசாரணையின் போது போலீஸார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய அந்த நபர் வருவதும் போவதும் பதிவாகி இருந்தது. 
 
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணன் என்ற நபரை அண்ணாநகரில் கைது செய்தனர் போலீஸார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்