கீழடி அகழ்வாராய்ச்சியை மூடி மறைக்க முயற்சி: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:05 IST)
கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை மூடி மறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் அதை தட்டி கேட்க தைரியம் இல்லாமல் முதலமைச்சர் இருப்பதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கீழடியில் தமிழர்களின் தொன்மையான பொருள்கள் பல கிடைத்து வரும் நிலையில் தமிழர்கள் எந்த அளவிற்கு பழமையானவர்கள் மற்றும் நாகரிகமானவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக கிடைத்து வருகின்றன
 
இந்த நிலையில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் இருக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை மூடிமறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் 
 
தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்கும் துணிச்சல் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கீழடி அகழ்வாராய்ச்சியின் அனைத்து அம்சங்களும் வெளியே தெரியும்படி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்