பிரியமுள்ள பெரியப்பா கட்சியில சேர்ந்திருக்கலாமே!? – ஸ்டாலினை பங்கம் செய்த செல்லூரார்!

திங்கள், 1 பிப்ரவரி 2021 (14:56 IST)
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், எம்ஜிஆரை தனது பெரியப்பா என கூறியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலாக பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசுகையில் ”எம்ஜிஆர் எனக்கு பெரியப்பாவாக இருந்து கல்வி உள்ளிட்ட பலவற்றில் பங்காற்றினார். முதல்வர் பழனிசாமி என்றாவது எம்ஜிஆரை அருகில் சென்றாவது பார்த்ததுண்டா?” என பேசியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ “தேர்தல் வந்துவிட்டதால் எம்ஜிஆரை பெரியப்பா என ஸ்டாலின் உறவுக் கொண்டாட தொடங்கிவிட்டார். பெரியப்பா மீது அவ்வளவு அபிமானம் கொண்டவர் ஸ்டாலின் என்றால் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோதே அவருடன் வந்து இணைந்திருக்கலாமே?” என்று கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்