பிரச்சாரம் முடிந்ததும் ரெஸ்ட் தான்.. மலைப் பிரதேச ஹோட்டல்களில் குவியும் புக்கிங்..!

Siva

புதன், 17 ஏப்ரல் 2024 (15:57 IST)
கடந்த சில நாட்களாக கோடையில் கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்ததும் முழு ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்,.

 இதற்காக ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் உள்ள ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரம் முடிந்ததும் குடும்பத்துடன் அரசியல் பிரபலங்கள் பல கோடை வாசஸ்தலங்களில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது

ஊட்டி கொடைக்கானல் உள்ள முக்கிய ஹோட்டல்களில் முழுமையாக புக்கிங் முடிந்துவிட்டதாகவும் இதற்கான செலவையும் வேட்பாளர் தலையிலேயே அவர்கள் வைத்து விட்டதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசியல்வாதிகளின் பிஏக்களும் கோடை வாசஸ்தலங்களுக்கு  செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நாளை முதல் கோடை வாசஸ்தலங்களில் பல அரசியல் பிரபலங்களை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்