பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:30 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்ட்ரோல் பங்குகளிலும் தற்பொழுது கூட்டம் அலைமோதுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.  
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகமெங்கும் 1 லட்சம், போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பபட்டுள்ளது.
 
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பலர் பெட்ரோல் பங்குகளில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பெட்ரோல் டீசலை கேன்களில் வாங்கிச் செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்