பழ நெடுமாறனுக்குக் கொரோனா உறுதி!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:04 IST)
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழ நெடுமாறனுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 வயதாகும் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் அவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்