அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்த உத்தரவு!

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:03 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கல்லூரிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்