பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி

Sinoj

புதன், 28 பிப்ரவரி 2024 (19:04 IST)
உறவாடி கெடுப்பதற்கு சிறந்த உதாரணம் பாஜக. உறவுக்கு கைகொடுத்த  ஓ.பன்னீசெல்த்தை தாமரை சின்னத்தில் நிற்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்  தாமரையில் போட்டியிடுவாரா? அல்லது தனித்து நின்று தன்மானம் காப்பாரா?   என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''அதிமுக-வை சிறு சிறு குழுக்களாக சிதறடித்து அதன் வலிமையை குறைத்து அந்த குழுக்களை தனித்தனியாக பாஜகவுடன் இணைத்து பலம்பெறுவது தான் பாஜகவின் நோக்கம்.இதுபோல் நடக்கும் என்று 2018-லே #ஓபிஎஸ் & #இபிஎஸ் இருவரையும் எச்சரித்ததால் ஏற்பட்டது தான் கே.சி.பி-யின் நீக்கம். 
2018-லிருந்து பாஜக எதிர்ப்பில் உறுதியான நிலைப்பாட்டில் கே.சி.பி இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் உறுதியாக அதிமுக-வை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் கே.சி.பழனிசாமி ''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்