கொரோனாவில் இருந்து மீண்டார் நல்லக்கண்ணு: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (06:29 IST)
கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான நல்லக்கண்ணு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 95 வயதான அவர் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் 
 
சுமார் ஒரு வார காலத்திற்கு பின் தற்போது அவர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு உள்ளதாகவும் அவருக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து மீண்ட அவர் தற்போது ரிலீசாகி வீடு திரும்பியுள்ளார்
 
கொரோனா நோயிலிருந்து மீண்ட நல்லக்கண்ணு அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்