காமெடி பண்றதை விட்டுட்டு கொரோனாவை தடுங்க! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:57 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் கூட்டம் நடத்திய நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “கொரோனாவால் தமிழகத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலும் வசதியானவர்களே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என்று கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த கருத்து குறித்து விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”அரிய வர்க்க பேத கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனாவை தடுக்க முயற்சியுங்கள். அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும் மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்” என கூறியுள்ளார்.

என்ன செய்தாலும் ஸ்டாலின் குறை கூறுவார் என முதல்வர் நேற்று கூறியிருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்