சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் !

வியாழன், 11 ஜூன் 2020 (22:52 IST)
கரூர் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை தனது பாதுகாப்புக்காக வந்த எஸ்கார்டு வாகனத்தில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்