கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்.. பொதுச்செயலாளருக்கு கொடுத்த மன்சூர் அலிகான்..!

Siva

வெள்ளி, 15 மார்ச் 2024 (22:04 IST)
நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து  முடிவு எடுக்க அந்த கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக இந்த கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் குறித்தான கட்சியின் செயற்குழு கூட்டம் வளசரவாக்கத்தில் நடைபெற்றது

இந்த செயற்குழு கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அவர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது முடிவு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே தேர்தல் பிரச்சார குழுவானது கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் எந்த கட்சிகள் கூட்டணியில் சேர்வது என்பது குறித்த முடிவை பொதுச் செயலாளர் எடுப்பார் என்பது தெரிய வருகிறது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்