சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த யோகா மாஸ்டர்! மதுரையில் நடந்த கொடூரம்!

திங்கள், 2 நவம்பர் 2020 (16:54 IST)
மதுரை திருமங்கலம் பகுதியில் யோகா மாஸ்டர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, திருமங்கலம் சாலையில் இருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன மடத்தில் குருநாதன்(64) என்பவர் யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இந்த யோகா வகுப்பில் அதிகமாக மாணவ மாணவிகளே கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு கடந்த இரண்டு வாரங்களாக யோகா வகுப்புக்கு வந்த 13 வயது மாணவி ஒருவரை தனியறைக்கு அழைத்துச் சென்ற குருநாதன் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியான சிறுமி பெற்றோரிடம் இதுபற்றி பேச, அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் பின்னர் போலிஸார் குருநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்