அதிமுக, திமுக சின்னங்கள் மாற்றம்! – தஞ்சையில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

திங்கள், 30 டிசம்பர் 2019 (10:18 IST)
தஞ்சையில் சில வார்டுகளில் சின்னங்கள் மாறியிருப்பதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவின்போது குழப்பங்கள் ஏற்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்ட வார்டுகளுக்கான மறு வாக்குப்பதிவுகளும் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வாக்காளர்களின் பெயர்களும், சின்னங்களும் மாறியிருப்பதாக ஏற்பட்டுள்ள குழப்பத்தால் சில வார்டுகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் உள்ளாட்சி பகுதிகளில் 8 இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு ஒன்றியம் 15வது வார்டில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் சின்னங்கள் மாறியுள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்