மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,
பின்னர் முன்னாள் எம்.பி. பார்த்தீபனை செய்தியாளர்களிடம் பேச வைத்தார். அப்போது பேசிய பார்த்தீபன், கடமலைகுண்டு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது ஆர்.பி.உதயக்குமார் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் சந்தித்தோம் என்றும் தேனியில் எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.