உடலில் கயிறு சுற்றிய சுறா... மீனவர்களை தேடி வந்து கட்டவிழ்த்த அதிசயம் !வைரல் வீடியோ

சனி, 14 டிசம்பர் 2019 (19:34 IST)
கடலில் ஆதிக்கம் செலுத்துவது திமிங்கலமாக இருந்தாலும் சுறாவுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. அப்படி கடலில் சுறாதான் எல்லாமுமாகவும் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிறது. 
இந்நிலையில், கடலில் சுற்றிக் கொண்டிருந்த சுறா ஒன்று, கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால், அது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக நினைத்து, அந்தக் கயிற்றை அவிழ்க்க வேண்டி, மீனவர்களைத் தேடி வந்த அதிசயம் நடந்துள்ளது.  
 
சோலை ராஜா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டு அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : 
 
உடலில் கயறு சுற்றிக்கொண்ட சுறா ஒன்று, மீனவர்களைத் தேடிவந்து உதவி கேட்டு, கயிற்றில் இருந்து விடுபட்ட காட்சி. எவ்வளவு அறிவு! என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

உடலில் கயறு சுற்றிக்கொண்ட சுறா ஒன்று, மீனவர்களைத் தேடிவந்து உதவி கேட்டு, கயிற்றில் இருந்து விடுபட்ட காட்சி. எவ்வளவு அறிவு!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்