புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம்- அரசு

Sinoj

புதன், 13 மார்ச் 2024 (15:34 IST)
புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும்  நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த  நிலையில்,  புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூன் வரை 15 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக குடும்ப அட்டைகள்   விநியோகம் தற்காலிகமாக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைகள் இல்லையென்றாலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்