சானிடைசரை குடிபோதைக்காக குடித்த நபர் உயிரிழப்பு !

சனி, 11 ஏப்ரல் 2020 (15:08 IST)
கோவையில் பாதுகாப்புக்காக ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட சானிடைசரை, குடிபோதைக்காக நீரில் கலக்கிக் குடித்த நபர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சானிடைசரை பயனபடுத்திக் கைகளைக் கழுவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நிலை தொடர்கிறது. அதனால், அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில்,கோவை மாவட்டம் சூலூரில் பெர்னார்ட் (35)என்பவர் திருப்பூரில் சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார்.

இவர், மதுவுக்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில், குடிக்க முடியாத நிலையில், கொரோனா தடுப்[பு நடவடிக்கையாக நிறுவனம் சார்பில் வழங்கபட்ட சனிடைசரை அவர் தண்ணீரில் கலந்துகுடித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அவர் ஒருநாள் முழுவதும் கண் விழிக்காமல் இருந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போலீஸார், ஊரடங்கு காரணமாக அங்கு உணவுக்கடைகள் இல்லாததால்,அவர்  சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்