வரதட்சணை தாரததால்...மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவன் !

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (17:02 IST)
வரதட்சனை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை கணவர் பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ப் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர், அயனாவரத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நீண்ட நாட்களாகப் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திவ்யாவிடம் ரூ. 10 லட்சம் வரதடனை தருமாறு கேட்டு கொடுமையுள்ளார் விஜயபாரதி. மேலும் வரதட்சனை கொடுக்காவில்லாம் ஆபாசபடத்தை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் கோபமுற்ற திவ்யா கடந்த ஜூலை மாதம் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அயனாவாரத்திலுள்ளா மகளி காவல்நிலையத்தில் விஜயபாரதி மீது புகார் செய்தார்.

இதுசம்பந்தமாக விஜயபாரதிக்கும் திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விஜய்பாரதி அவரது ஆபாசபுகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்