இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்- ஓ. பன்னீர்செல்வம்

Sinoj

செவ்வாய், 26 மார்ச் 2024 (17:59 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,   பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில்,   வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்ககப்பட்டார். எனவே பாஜகவுக்கு ஆதரளிப்பதாக முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த நிலையில், தே.ஜ.கூட்டணியில் அங்கம் வசிக்கும் அவருக்கு ராம நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கும்   நிலையில், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு தர வேண்டும் இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள் என்று தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
 
இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் தனது அணிக்கு பக்கெட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார் ஓபிஎஸ்.
 
மேலும், ஓபிஎஸ் போட்டியிடும் ராமா நாதரபும் தொகுதியில்  மொத்தம் ஐந்து பேர் பன்னீர் செல்வம் பெயரில் போட்டியிடுவது முன்னாள் முதல்வருக்கு நெருக்கெடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்