அன்புமணியை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணமில்லை - தயாநிதி!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (14:32 IST)
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு தயாநிதி மாறன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாசும், யார் அதிக பணம் தருகிறார்கள் என பேரம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை கொள்கை மட்டும் தான் உள்ளது.  
 
அதிமுகவிடம் நிறைய பணம் உள்ளது அவர்கள் வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்க்கலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது இட ஒதுக்கீடு கொள்கையை பேசாமல் சாகும் போது சங்கரா சங்கரா என்பது போல டாக்டர் ராமதாஸ் தற்போது இட ஒதுக்கீடு கொள்கை குறித்து பேசுகிறார். மக்களை ஏமாற்றி அவருடைய மகனும் பணம் சம்பாதித்து வருகின்றனர் என விமர்சித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்