ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு

திங்கள், 13 ஏப்ரல் 2020 (17:28 IST)
இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை, கொரோனாவால் கடந்த  24 மணி நேரத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர். 796 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க வரும் 30ம் ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும், காணொலி காட்சி மூலம் முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படும்  என பதிவாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்