தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (18:25 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5951 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 391,303 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5951  பேர்களில் 1270 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,949 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ஒரே நாளில் 107 பேர் பலி ஆகியுள்ளனர், தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்