தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

புதன், 3 பிப்ரவரி 2021 (19:02 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வால் மொத்தமாகக் பாதிப்பு  அடைந்தவர்களின் எண்ணிக்கை 8,39,866 பேராக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 593  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,23,001 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால்  04 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 12,371  ஆக அதிகரித்துள்ளது.

 சென்னையில் இன்று கொரொனாவால் 145  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,31,711 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது, தமிழகத்தில் 4,494 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்