அடுத்தடுத்த ராஜினாமா: புதுச்சேரி சபாநாயகர் அவசர ஆலோசனை !

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:14 IST)
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 
புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் மற்றும் சட்டவல்லுநர்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்