திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு – இன்று பேச்சுவார்த்தை!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:28 IST)
திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க படவுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவியிருப்பதை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களான உம்மன் சாண்டி மற்றும் குண்டு ராவ் ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் திமுகவின் குழுவும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்