புயல் நின்றும் விடாத மழை; 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

புதன், 6 டிசம்பர் 2023 (09:35 IST)
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை தாண்டி கரையை கடந்த நிலையில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வந்தது.

தற்போது புயல் கரையை கடந்துவிட்ட நிலையிலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்