ஆட்டோவில் வந்ததற்காக மீது வழக்குப் பதிவு... தீக்குளித்த நபர்...

வியாழன், 2 ஜூலை 2020 (14:15 IST)
சென்னை தாம்பரம் அடுத்த காந்தி சாலை, முடிச்சூர் சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  ஹரி( 40 வயது ) என்பவர் ஆட்டோ வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த  ஹரி தன்னை வழக்குப் பதிவு செய்த அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் சென்று  அவர் மீது அவரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தோர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்