இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலிசார் விசாரணை !

புதன், 18 டிசம்பர் 2019 (21:02 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வம் இருக்கிறார்.
இந்நிலையில்,  இபிஎஸ் மற்றும் ஓ.பி. எஸ் ஆகிய இருவரது வீடுகளுக்கும் தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த மிரட்டல் விடுத்தது என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகிறது.
 
மேலும், அந்த மர்ம நபர் இன்னும் ஒரு மணிநேரத்தில் மூன்று இடங்களில்  தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து தொலைபேசி இணைப்பை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்