சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100 ஐ தாண்டியது!

ஞாயிறு, 12 நவம்பர் 2023 (11:06 IST)
சென்னையில் இன்று தீபாவளியையொட்டி காற்றில் மாசு அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. எனவே நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை  உடுத்தி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இன்று  அதிகாலையிலே மக்கள்  கோயில்களுக்குச் சென்று குடும்பத்துடன் சாமி தரிசனமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று தீபாவளியையொட்டி காற்றில் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளியையயொட்டி மக்கள் அனைவரும் வீடுகளில் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில்,பெருங்குடி- 178, அரும்பாக்கம் -159,ராயபுரம் -115, வேளச்சேரி-117, என அனைத்து இடங்களில் காற்றின் தரக்குறிபீடடு 100 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்