திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த போலீஸ்: சென்னையில் அதிர்ச்சி

ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (09:15 IST)
சென்னை துரைப்பாக்கத்தில் போலீஸ்காரர் ஒருவர் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி பொதுமக்கள அவரை சிறைபிடித்தனர்.
சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் காவலர் ஒருவர் மறைவிடத்தில் திருநங்கையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறி அவரை சிறைபிடிக்க பொதுமக்கள் முற்பட்டனர். பயந்துபோன அவர் தலைதெறிக்க ஓடினார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றிசவளைத்து பிடித்தனர்.
 
ஒரு காவலர் செய்யும் வேலையா இது. யூனிஃபார்ம் போட்டுட்டு இந்த வேலையெல்லாம் செய்யலாமா என பொதுமக்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அந்த காவலரோ ஒன்றும் பேச முடியாமல் திணறினார். அப்போது அங்கு வந்த பள்ளிக்கரனை போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அந்த போலீஸ்காரரை கூட்டி சென்றனர். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்