16 வயது இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ள முயற்சி

செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:11 IST)
வேலூரில் 16 வயது இளம்பெண்ணை பெண் புரோக்கர் ஒருவர் விபச்சாரத்திற்கு தள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூரில் 16 வயது இளம்பெண் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்துக் கொண்டிருந்தார், வேறு பாஷையில் ஏதோ பேசியபடி அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தவாறு சென்றார்.
 
இதனைப்பார்த்த மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த பெண்மணியை விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
அந்த 16 வயது பெண்ணை அடித்தவர் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கானா ஆவார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தமிழகம் வந்து இங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அத்தோடு வங்கதேசத்தை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணின் வறுமையை போக்க வேலை வாங்கி தருகிறேன் என கூறி முஸ்கானா அந்த பெண்ணை வேலூருக்கு கூட்டி வந்துள்ளார்.
 
பின் அந்த சிறுமியை விபச்சாரத்திற்கு தள்ள முயற்சித்துள்ளார். இதனால் சிறுமி தப்பி ஓடியுள்ளார். அப்போது தான் ரோட்டில் வைத்து சிறுமியை பிடித்த முஸ்கானா, அவரை கடுமையாக தாக்கியபோது போலீஸில் மாட்டிக்கொண்டார். 
 
இதையடுத்து போலீஸார் முஸ்கானாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்